follow the truth

follow the truth

June, 21, 2025
Homeஉலகம்கொலம்பியா விமானங்களுக்கு தடை விதித்த வெனிசுலா

கொலம்பியா விமானங்களுக்கு தடை விதித்த வெனிசுலா

Published on

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றதில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று மீண்டும் ஜனாதியாக தேர்வு செய்யப்பட்டார்.

தேர்தலில் மோசடி நடந்ததாகக்கூறி எதிர்க்கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சியினருக்கு கொலம்பியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஆதரவு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கிடையே, எதிர்வரும் 25-ம் திகதி அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை சீர்குலைக்கும் வகையில் நடைபெறும் போராட்டத்தில் தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.

இதுதொடர்பாக கொலம்பியா, மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த 17 பேர் உட்பட சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலா அரசாங்கம் தடை விதித்துள்ளது. தேர்தல் முடியும் வரை இந்தத் தடை நீடிக்கும் என வெனிசுலா உள்துறை மந்திரி டியோஸ்டாடோ கபெல்லோ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அகமதாபாத் விபத்து – ஏர் இந்தியா முன்பதிவுகளில் வீழ்ச்சி

அச்சம் காரணமாக ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா அகமதாபாத்தில்...

அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ இஸ்ரேல் – ஈரானுக்கு வட கொரியா ஆதரவு

ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை "கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்" என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது...

சுவிஸ் வங்கியில் அதிக பணம் வைத்திருக்கும் நாடு

சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகமாக காணப்படுவதாக அந்நாட்டின் தேசிய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள...