follow the truth

follow the truth

May, 21, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாரூ. 5.9 மில்லியன் நிதி மோசடி - NPP உறுப்பினர் கைது

ரூ. 5.9 மில்லியன் நிதி மோசடி – NPP உறுப்பினர் கைது

Published on

இம்முறை பதுளை – ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள சக்தியின் உறுப்பினர் ஒருவர் ரூ. 5.9 மில்லியன் நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் முறைப்பாடளித்தவரும் அதே கட்சியில் ஹல்துமுல்ல பிரதேச சபையில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

மிளகு வியாபாரம் தொடர்பான பணப் பரிவர்த்தனை தொடர்பாக முறைப்பாட்டாளருக்கும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவருக்கும் இடையே சிறிது காலமாக தகராறு இருந்து வந்துள்ளது.

இதன்படி, கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, பணம் கிடைக்காதது தொடர்பாக பண்டாரவேல பிரதேச நிதி குற்றப்பிரிவில் சம்பந்தப்பட்ட முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சந்தேக நபரான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் நேற்றையதினம்(20) கைது செய்யப்பட்டு பண்டாரவேல நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரணிலும் மைத்திரியும் சந்திப்பு

கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிலைநாட்ட முன்னாள் ஜனாதிபதி...

பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பிரதமர்...

புனரமைப்பது வேறு புணரமைப்பது வேறு.. நான் பயந்து விட்டேன் [VIDEO]

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இற்கும் இடையே இன்றும் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. "அமைச்சர்...