follow the truth

follow the truth

May, 22, 2025
Homeஉலகம்காஸாவில் 14,000 குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்கும் நிலை

காஸாவில் 14,000 குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்கும் நிலை

Published on

அடுத்த 48 மணி நேரத்திற்குள் போதுமான உதவி கிடைக்காவிட்டால், காஸா பகுதியில் உள்ள 14,000 குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் என்று ஐ.நா. உதவி நிறுவனத்தின் தலைவர் டாம் பிளெட்சர் எச்சரித்ததை அடுத்து, காஸா பகுதிக்குள் 100 லாரிகளை அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காஸாவுக்குள் அதிகமான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதில் உலக நாடுகள் “எங்களுடன் இணைய வேண்டும்” என்று உலக நாடுகளை ஐ.நா. அழைப்பதாக டாம் பிளெட்சர் கூறியுள்ளார்.

திங்களன்று உதவிப் பொருட்கள் கொண்டு சென்ற ஐந்து லாரிகள் காஸாவிற்கு வந்ததாக கூறிய பிளெட்சர், அந்த உதவி “கடலில் ஒரு துளி மட்டுமே” என்று விவரித்தார்.

காஸா பகுதிக்குள் உதவி லாரிகள் நுழைவதை இஸ்ரேலிய இராணுவம் 11 வாரங்களுக்குத் தடுத்தது, நேற்று முன்தினம் தடை முடிவுக்கு வந்த பிறகும், 5 லாரிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. அதன் பிறகு ஐ.நா. உதவி நிறுவனத்தின் தலைவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு காஸா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், அந்தத் தாக்குதல்களில் 38 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது இஸ்ரேல் பிடித்து வைத்திருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் நடவடிக்கை எடுத்தால், காஸா போர் நாளை முடிவுக்கு வரக்கூடும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

2023 அக்டோபரில் ஹமாஸால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளில் இருந்து இன்னும் 58 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகவும், அவர்களில் 23 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரிசி வாங்குவது குறித்து சர்ச்சை கருத்து – ஜப்பானின் விவசாய அமைச்சர் இராஜினாமா

ஜப்பான் விவசாய அமைச்சர் டகு இடொ(Taku Eto), கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், நான்...

கொலம்பியா விமானங்களுக்கு தடை விதித்த வெனிசுலா

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றதில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று...

இந்தியாவில் மீண்டும் தலை தூக்கியுள்ள கொரோனா – தற்போது 257 பேருக்கு உறுதி

பல ஆசிய நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவே கூறப்படுகிறது. உலகையே...