follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தாதியர் சேவைக்காக 3147 புதிய தாதியர்கள் நாளை நியமனம்

தாதியர் சேவைக்காக 3147 புதிய தாதியர்கள் நாளை நியமனம்

Published on

நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, நாளை(24) சனிக்கிழமை காலை அலரி மாளிகை வளாகத்தில் உள்ள கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் தாதியர் சேவை வரலாற்றில் அதிக எண்ணிக்கையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை.

இந்த விழாவுடன் இணைந்து, தாதியர் சேவையில் 79 சிறப்பு தர அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளும் வழங்கப்படும்.

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தலைமையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த விழாவில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், டாக்டர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகள்
கலந்து கொள்வார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...