follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்ப் பாலின் முதல் தொகுதி ஆய்வக சோதனைக்கு

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்ப் பாலின் முதல் தொகுதி ஆய்வக சோதனைக்கு

Published on

இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி தேங்காய்ப் பால் நாளை அனுமதி மற்றும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு இணைந்து பெற்ற அமைச்சரவை அனுமதிக்கு அமைய, இந்த தேங்காய் பால் கையிருப்பு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தென்னை தொழில் துறையுடன் தொடர்புடைய தொழில்துறையினருக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குவதையும் அதன் மூலம் உள்நாட்டு தேங்காய்களின் விலையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு தேங்காய் பால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2025 இல் அமைச்சரவையின் அனுமதிக்குப் பிறகு, 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான அளவில், தேங்காய் பூ, தேங்காய் பால் அல்லது மா, தேங்காய் துண்டுகள் (கொப்பரா அற்ற) போன்ற தேங்காய் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முதல் இருப்பு இது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...