follow the truth

follow the truth

June, 21, 2025
HomeTOP1இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்ப் பாலின் முதல் தொகுதி ஆய்வக சோதனைக்கு

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்ப் பாலின் முதல் தொகுதி ஆய்வக சோதனைக்கு

Published on

இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி தேங்காய்ப் பால் நாளை அனுமதி மற்றும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு இணைந்து பெற்ற அமைச்சரவை அனுமதிக்கு அமைய, இந்த தேங்காய் பால் கையிருப்பு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தென்னை தொழில் துறையுடன் தொடர்புடைய தொழில்துறையினருக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குவதையும் அதன் மூலம் உள்நாட்டு தேங்காய்களின் விலையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு தேங்காய் பால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2025 இல் அமைச்சரவையின் அனுமதிக்குப் பிறகு, 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான அளவில், தேங்காய் பூ, தேங்காய் பால் அல்லது மா, தேங்காய் துண்டுகள் (கொப்பரா அற்ற) போன்ற தேங்காய் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முதல் இருப்பு இது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ...

காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்க்க பொறுப்புள்ள அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்படும்

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை...

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்

தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு...