பிரான்ஸ் நாட்டில் குழந்தைகள் வந்து செல்லும் அனைத்து வெளிப்புற இடங்களிலும் புகைபிடிப்பதை தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடை ஜூலை 1 முதல் அமுலுக்கு வரவுள்ளதுடன், கடற்கரைகள், மைதானங்கள், பொது பூங்காக்கள், பாடசாலைகளுக்கு வெளியே, பேருந்து நிறுத்தங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள் ஆகிய இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.