நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நேற்று(30) இரவு 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சுமார் 50,009 மின்வெட்டு தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்தே அதிகளவான முறைப்பாடுகள் பதிவானதாகவும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
தற்போது வரை மின்சார விநியோகம் சீராகாத பகுதிகள் இருந்தால் அல்லது மின்சார கம்பிகள் முறிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால், மின்சார சபையின் 1987 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு அளிக்குமாறும், அல்லது மின்சார சபையின் CEB Care கைப்பேசி செயலி (mobile app) மூலம் அறிவிக்குமாறும் மின்சார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.