வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் சதோச ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளில் அவர்களைப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(johnston fernando) மற்றும் மூன்று பேருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஒக்டோபர் முதலாம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.