ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வீழ்த்தி முதல் முறையாக ரோயர் செலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் நேற்று முதல் தற்போது வரை கொண்டாடி வருகின்றனர்.
18-வது சீசனில் கிண்ணத்தை வென்ற ஆர்சிபி அணி வீரர்களுக்கு சின்னசாமி ஸ்டேயத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. அதற்கு முன் பெங்களூருவில் திறந்தவெளி பஸ்சில் அணி வீரர்கள் வெற்றி பேரணி நடத்தவுள்ளனர். அந்த பேரணி விதான சவுதாவில் தொடங்கும் பேரணி சின்னசாமி மைதானத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்சிபி வீரர்கள் வரும்வரை மைதானத்தின் சுவர்கள் மற்றும் வேலிகளில் ரசிகர்கள் ஏறிச் செல்ல தொடங்கினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகினார். 10 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.