follow the truth

follow the truth

June, 7, 2025
HomeTOP1திட்டமிட்ட உரிய காலத்திற்குள் வேலைத்திட்டங்களை நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

திட்டமிட்ட உரிய காலத்திற்குள் வேலைத்திட்டங்களை நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

Published on

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நகர அபிவிருத்தித் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம், கொழும்பு மாவட்டத்தில் கால்வாய் சுத்திகரிப்பு மற்றும் கழிவு முகாமைத்துவத் திட்டங்கள், நீர்த்திட்டங்கள் மற்றும் வீடமைப்பு உதவித் திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த வேலைத்திட்டங்கள் ஒவ்வொன்றும் திட்டமிட்ட உரிய காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி,...