குடியேற்ற உரிமை போராட்டம் காரணமாக, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குடியேறிகளை அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் முனைப்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, லாஸ் ஏஞ்சலஸில் இருக்கும் சட்ட விரோத குடியேறிகளைக் கடந்த வெள்ளியன்று ICE எனப்படும் Immigration and Customs Enforcement அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து லாஸ் ஏஞ்சலஸில் தொடர்ந்தும் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர 4,000 தேசிய காவல் படை வீரர்களை அனுப்ப அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்தார். இது, அவரின் சட்ட விரோத குடியேறிகளை நாடு கடத்தும் பெரும் அளவிலான திட்டத்தில் ஒரு புதிய அத்தியாயமாக மாறியுள்ளது.
டிரம்பின் முக்கியக் கொள்கையில் (சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவது) முன்னேற்றம் காட்ட வேண்டும் என அழுத்தம் அதிகரிக்கும் காரணத்தால், சமீபத்திய வாரங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் (ICE) துறை, தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.