2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த மின் கட்டண திருத்தம் நாளை (12) முதல் அமுலுக்கு வருவதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் தலைவர் கே.பி.எல். சந்திரலால் இந்தக் கருத்தை வெளியிட்டார்.