follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1காய்ச்சல், சளி, ஏற்பட்டுள்ள சிறுவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கோரிக்கை

காய்ச்சல், சளி, ஏற்பட்டுள்ள சிறுவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கோரிக்கை

Published on

காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டுள்ள சிறுவர்களைப் பாடசாலை அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

டெங்கு அல்லது சிக்குன்குனியா இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், குழந்தைகள் கொசு வலையைப் பயன்படுத்துவது முக்கியம் என்றும், இது மற்றவர்களுக்கு தொற்றுவதை தடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்புளுவென்சா போன்ற வைரஸ் விரைவாக சிறுவர்களிடத்தே பரவக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.

காய்ச்சலுடன் எலும்பு மூட்டுக்களில் அதிக வலி உணரப்படுவது குறிப்பாக சிக்குன்குனியா நோய்க்கான அறிகுறியாகும்.

குறித்த நோயாளிகளுக்கு இயற்கையான திரவ உணவை வழங்குவது மிகவும் முக்கியமெனவும் டெங்கு நோயாளிகளுக்கு சிவப்பு மற்றும் கருப்பு நிற உணவை வழங்க வேண்டாமென்று அறிவுறுத்தியுள்ளார்.

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் அதிக அளவில் பதிவாகி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...