follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉலகம்இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - விமான சேவைகள் இரத்து

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் இரத்து

Published on

இந்தோனேசியாவின் பாலி தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலி தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள புளோரஸ் தீவில் 1,703 மீட்டர் உயமுடைய இரட்டை சிகரங்களைக் கொண்ட “மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி” (Mount Lewotobi Laki-Laki) எரிமலை வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது.

இரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களில் அவுஸ்திரேலியாவுக்கான ஜெட்ஸ்டார் மற்றும் விர்ஜின் விமான சேவைகளும் அடங்கும்.

ஏர் இந்தியா, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூரின் டைகர் ஏர் மற்றும் சீனாவின் ஜுன்யாவோ ஏர்லைன்ஸ் ஆகியவையும் விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக பாலியின் சர்வதேச விமான நிலைய வலைத்தளம் தெரிவித்துள்ளது.

புளோரஸில் உள்ள லாபுவான் பாஜோவிற்கு புறப்படும் பல உள்நாட்டு விமானங்களும் இரத்து செய்யப்பட்டன.

மேலும், ஒரு கிராமத்திலுள்ள மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் ஏர் இந்தியா 3 சர்வதேச விமானங்கள் இரத்து

ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான 3 விமானங்களின் சர்வதேச பயணங்கள், இன்று(18) ஒரே நாளில் தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களினால்...

தான் ஒருபோதும் சரணடைய மாட்டேன் – ஈரானின் உச்ச தலைவர்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தான் ஒருபோதும் சரணடைய மாட்டேன் என்று அந்நாட்டு ஊடகங்கள் மூலம்...

ஈரான் – இஸ்ரேல் உக்கிர மோதல் : மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவும் நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் மசகு...