follow the truth

follow the truth

June, 21, 2025
HomeTOP1வாகனங்களில் தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் நடவடிக்கை ஜூலை முதல் ஆரம்பம்

வாகனங்களில் தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் நடவடிக்கை ஜூலை முதல் ஆரம்பம்

Published on

அனுமதியின்றி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கை ஜூலை மாதம் 1ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கான உப பொலிஸ் பரிசோதகர் (DIG) இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் அறிவித்தலின்படி, இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த விசேட நடவடிக்கையின் போது, வாகனங்களில் அனுமதியின்றி பொருத்தப்பட்டுள்ள அதீத ஒளி விளக்குகள், அதீத ஒலிகளை வெளியிடும் ஸ்பீக்கர்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் போன்ற உதிரிபாகங்கள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேவையற்ற உதிரிபாகங்கள், விபத்துகள் நேரும்போது வீதி பயணிகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய அபிவிருத்தி வங்கி புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிரதிநிதிகள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர், பிரதம அமைச்சர் கலாநிதி...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நாளை கிளிநொச்சியில்

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம்...

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம்?

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற செய்தி...