follow the truth

follow the truth

August, 19, 2025
HomeTOP1UNICEF பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

UNICEF பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Published on

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதம மந்திரிய கலாநிதி ரஜினி அமர சூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-Andre Franche உட்பட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதிகளுக்கிடையே இன்று (20) நாடாளுமன்றத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதில் இலங்கையில் சமாதானத்தைப் பேணுதல் , மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், சுகாதாரம், நிர்வாகம் மற்றும் நிதியளித்தல், பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல், கல்வி, பொருளாதாரத்தை இயல்பு நிலைப்படுத்தல், காலநிலை மாற்றம், விவசாயம் மற்றும் மீன்பிடித்தொழில் ஆகிய துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தால் வழங்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகள் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடல் நடைபெற்றதோடு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குழுவின் அறிக்கை தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் ஆதரவை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் இதில் UNICEF பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...