follow the truth

follow the truth

June, 24, 2025
HomeTOP1கொழும்பு மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தத் திட்டம்

கொழும்பு மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தத் திட்டம்

Published on

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு இணையாக, நாடளாவிய ரீதியில் 50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத்திட்டத்திற்கு விமானப்படையின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், உணவகம், ஓய்வறை, டிக்கெட் கவுண்டர்கள், நிர்வாகப் பிரிவு, செயல்பாட்டு அறை மற்றும் சாரதிகள் தங்குமிடம் ஆகியவற்றை நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஹெக்டெயார் 1.42 நிலப்பரப்புடன் கூடிய மத்திய பேருந்து நிலையம் 1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதுடன், தினசரி 1500 – 2000 வரையிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பாக நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் செயலாளருக்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவுக்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24)...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் எம்.பிக்களுக்கு செயலமர்வு

ஒன்லைன் முறையின் கீழ் வரி அறிக்கையை முன்வைப்பது உள்ளிட்ட வரி அறவீடு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களை விளிப்புணர்வூட்டும் செயலமர்வு...

கொழும்பு பங்குச் சந்தையில் பதிவான மாற்றம்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று(24) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு...