follow the truth

follow the truth

August, 26, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாநாங்கள் மட்டுமே நல்லவர்கள் என்று கூறினார்கள் ஆனால் இன்று தலைகீழாக மாறிவிட்டது - லட்சுமணன் சஞ்சய்

நாங்கள் மட்டுமே நல்லவர்கள் என்று கூறினார்கள் ஆனால் இன்று தலைகீழாக மாறிவிட்டது – லட்சுமணன் சஞ்சய்

Published on

தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி தேர்தலின் போதும் பாராளுமன்ற தேர்தலின் போதும் கூறிய விடயம் என்னவென்றால் நாங்கள் எந்தக்கட்சியோடும் சேர மாட்டோம். நாங்கள் மட்டுமே நல்லவர்கள் என்று கூறினார்கள் ஆனால் இன்று தலைகீழாக மாறிவிட்டது. என ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லட்சுமணன் சஞ்சய் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் இன்று கொழும்பு மாநகர சபையில் பல்வேறு கட்சிகளுடன் இணைந்தே மேயர் பதவியை பெற்றுக்கொண்டார்கள். அதுமட்டுமல்லாது பல உள்ளுராட்சி சபைகளில் பல கட்சிகளை இணைத்துக்கொண்டு ஆட்சியமைத்துள்ளார்கள்.

அதற்கு பெரிய உதாரணம் தான் நுவரெலியாவில் பல சபைகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளனர்.

பார்த்தீர்கள் என்றால் தேர்தல் காலங்களில் தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜா கூறியிருந்தார் தாங்கள் ஒருபோதும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் சேர மாட்டோம் என்று . அவர்கள் கள்வர்கள் 70 வருடங்களாக நாட்டை ஏமாற்றினார்கள் என்று அவரே கூறினார்

அதுமட்டுமல்லாது அதே பதுளை மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் கூறியிருந்தார் இதுவரை மக்களுக்கு எதிர்கட்சி எது ஆளும்கட்சி எது என்று தெரியாது இருந்தது இதற்கு காரணம் மலையகத்தில் உள்ள ஒரு முக்கியமான கட்சி என்று கூறியிருந்தார்.

ஆனால் இன்று அவர்களுடன் நேர்ந்து ஆட்சி அமைத்துள்ளார்கள். தேர்தல் காலங்களில் இவர்கள் கூறினார்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கள்வர்கள் அவர் தான் நாட்டை நாசமாக்கியவர்கள் என்று. ஆனால் இன்று அவர்களுடன் சேர்ந்து தான் ஆட்சிமையக்கிறார்கள்

அப்போது இலங்கை தொழிலாளர் காங்கிஸை சேர்ந்தவர்கள் மாணிக்க கங்கையில் நீராடி பாவத்தை கழுவிவிட்டு வந்துள்ளார்களா? இல்லையென்றால் அம்பிகாவும் கிட்னணும் கூறியது பொய்யா?

அப்படியெனறார் தேர்தல் காலங்களில் கெட்டவர்களாக இருந்தவர்கள் இப்போது நல்லவர்களாக மாறி விட்டார்களா அல்லது நல்லவர்களை இவர்கள் கெட்டவர்களாக சித்தரித்தார்களா?

இவ்வாறு கேவலமான ஒரு அரசியலை இவர்கள் செய்கிறார்கள். அவர்களுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. ஆனால் மகிந்த ராஜபக்ச கேவலமான அரசியல் செய்யவில்லை. அவர் யாரையும் சுட்டிக்காட்டவில்லை.

இதை பார்த்தால் இவர்களும் பதவிக்கு ஆசைப்படுகிறவர்கள் என்று அப்பட்டமாக தெரிகிறது. அதுமட்டுமல்லாது இந்த நாட்டிலே பல பிரச்சினைகள் இருக்கிறது அது எதையுமே அவர்கள் பார்க்கவில்லை.

ஆகவே இது தான் உங்களுடைய கடைசி பாராளுமன்றம் இனி பாராளுமன்றம் வருவதை பற்றி நினைத்தக்கூட பார்க்காதீர்கள். மக்கள் உங்களை பற்றி நன்றாக அறிவார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...