follow the truth

follow the truth

June, 27, 2025
HomeTOP2"சிறை வாழ்க்கைக்கு நாம் அஞ்சவில்லை. உண்மை ஒரு நாள் வெல்லும்" - கெஹெலிய

“சிறை வாழ்க்கைக்கு நாம் அஞ்சவில்லை. உண்மை ஒரு நாள் வெல்லும்” – கெஹெலிய

Published on

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசு முயற்சிக்கின்றது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அரசு என் மீதும், என் குடும்பம் மீது ஆதாரம் இல்லாத போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைத்து வாழ்நாள் முழுவதும் துன்புறுத்த இந்த அரசு முயற்சிக்கின்றது. சிறை வாழ்க்கைக்கு நாம் அஞ்சவில்லை. உண்மை ஒரு நாள் வெளிவரும். நீதி தேவதை எம்மைக் காப்பாற்றுவாள்.” – என்றார்.

கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணையம் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மருமகன் மீது இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் 43 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீரவன்சவுக்கு விரைவில் ஆப்பு

எதிர்காலத்தில் 40க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது வழக்குத் தொடரப்படும் என்று விவசாயம் மற்றும் கால்நடைத்துறை பிரதி அமைச்சர்...

ஹமாஸ் காவல் பிரிவை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்

மத்திய காசாவில் உள்ள நகர் ஒன்றில், ஹமாஸ் காவல் பிரிவை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது...

எங்கள் தேசம் முதுகெலும்புள்ள தேசம் ஒரு நாளும் சரணடைய மாட்டோம் – காமெய்னி சூளுரை

ஈரான் சுப்ரீம் லீடர் ஆயத்துல்லாஹ் அலி காமெய்னி இன்று ஈரான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். குறித்த உரையில் அமெரிக்க...