follow the truth

follow the truth

June, 27, 2025
HomeTOP2"எனக்கு ஹயேஷிகாவுடன் தனிப்பட்ட வெறுப்பு இல்லை" - மஹிந்த

“எனக்கு ஹயேஷிகாவுடன் தனிப்பட்ட வெறுப்பு இல்லை” – மஹிந்த

Published on

அண்மையில் நடைபெற்ற ஆசிய அதிசய விருதுகளில் விருந்தினராகக் கலந்து கொண்ட தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, ‘சிறந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் ஆசிரியர்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஹயேஷிகா பெர்னாண்டோவுக்கு விருது வழங்க மறுத்துவிட்டார்.

அந்த நேரத்தில், அருகில் இருந்த வேறொருவர், அதற்கு பதிலாக ஹயேஷிகா பெர்னாண்டோவுக்கு விருதை வழங்கினார்.

கடந்த காலங்களில் ஒரு இளைஞனின் விதைப்பையைத் தாக்கி மறைந்திருப்பது உட்பட பல சர்ச்சைக்குரிய சம்பவங்களுக்குப் பிரபலமான ஹயேஷிகா பெர்னாண்டோவுக்கு, இந்த விருது வழங்கும் விழாவில் மிகவும் பிரபலமான ஆசிரியருக்கான மற்றொரு விருதும் வழங்கப்பட்டது, மேலும் அந்த நேரத்தில் மேடையில் இருந்த சுதத் ரோஹண அவர்களால் எந்த பிரச்சினையும் இல்லாமல் விருது வழங்கப்பட்டது.

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இது தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவிக்கையில்;

“அவர் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. நான் அவரை நேரில் சந்தித்தது அதுதான் முதல் முறை. அவர் அழைக்கப்பட்டபோது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. நம் நாட்டில் சுமார் 260,000 ஆசிரியர் அதிபர்கள் உள்ளனர். அப்படியானால் அவர் அவர்களில் சிறந்த ஆசிரியரா? மனசாட்சிப்படி எனக்கு அப்படி ஒரு விருதை வழங்க முடியவில்லை. அதனால் நான் மிகவும் பணிவுடன் விருதை வழங்க மறுத்துவிட்டேன்.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி, ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்கு அனுமதி

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2025 மே 19ஆம் திகதிய...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை முதலாம்...

போர்ட் சிட்டி கடலில் காணாமல் போன பல்கலை மாணவனின் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நீராடச்சென்று நீரில் மூழ்கி காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று(27)...