டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 20க்கு மேற்பட்ட சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டெக்சாஸில் நேற்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த அனர்த்தத்தில் மீட்பு பணிக்காக 14 உலங்கு வானூர்திகளும், 12 ட்ரோன்கள் மற்றும் ஒன்பது மீட்புக் குழுக்களும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் முடிந்தவரை தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.