பல்கலைகழகங்களில் பகிடிவதையை தடுப்பதற்காக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டல் கோவையை கடுமையாக பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு இன்று உத்தரவிட்டது.
இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்த தேவையான நிதி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வசதிகளை வழங்குமாறு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருக்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றால் உடல் மற்றும் மூளை காயங்களுக்கு உள்ளான முதலாம் ஆண்டு மாணவன் பசிந்து ஹிருஷான் டி சில்வா தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஷிரான் குணரத்ன, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு, இந்த உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விசாரிக்க வழக்கை ஜனவரி 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்க 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
பகிடிவதையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் இந்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் மற்றும் விடுதி வளாகங்களுக்குள் உள்ள பொது இடங்களைக் கண்காணிக்க நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வழிகள், உணவக விடுதிகள், விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் தாழ்வாரங்களில் சிசிடிவி கெமராக்களை நிறுவவும் முன்மொழியப்பட்டுள்ளது.