follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

Published on

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று(09) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

நாட்டில் தொழிற்துறை மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்ட களுத்துறை நகரத்தை பரந்த அபிவிருத்திக்கு உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை விரைவாக செயற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இங்கு அனைத்துத் தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது.

சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொண்டதன் பின்னர், பிரதான நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் மற்றும் வினைத்திறன் மிக்கதாக்குவது குறித்தும், அதன் மூலம் களுத்துறை நகரில் தற்போது இனங்காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அனைத்து நிறுவனங்களுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...