ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம்.முஷாரப் கட்சியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் உயர்பீடக் கூட்டம் இன்று(10), “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் நடைபெற்றபோது இந் நியமனம் உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.
இதில் கட்சியின் செயலாளர் ,பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உட்பட உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.