follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களின் தோல்களை வீசும்போது கவனம் தேவை

ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களின் தோல்களை வீசும்போது கவனம் தேவை

Published on

ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களின் தோல்களை வீதியோரங்களிலும், வெவ்வேறு இடங்களிலும் வீசுவதைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார்கள்.

பழங்களின் தோல்களில் நீர் தேங்கும்போது, டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு சாதகமான சூழல் உருவாகும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களின் தோல்கள் டெங்கு நோய்க்கான நுளம்புகள் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழலை உருவாக்கக்கூடும் என பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இத்துடன், பலர் இந்த பழங்களின் தோல்களை வீதியோரங்களிலும், வீடுகளின் வெவ்வேறு இடங்களிலும் வீசுவதால், அவை, டெங்கு நுளம்பு இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதால், குறித்த பழங்களின் தோல்களை அப்புறப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு வைத்தியர் தீபால் பெரேரா வேண்டுகோள் வைத்துள்ளார்.

டெங்கு நுளம்புகள், இனப்பெருக்கம் செய்ய மங்குஸ்தான், ரம்புட்டான் ஆகியவற்றின் பழத்தோல்கள் போன்ற குறைந்த அளவிலான நீர்தேங்கும் இடம் போதுமானது என்பதால், அவை டெங்கு நுளம்புகள் பெருக உகந்த இடமாக அமையும் என வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...