follow the truth

follow the truth

July, 16, 2025
HomeTOP1விளையாட்டுத்துறை அமைச்சுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

Published on

சிதறியுள்ள மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களை வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பதிலாக, விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் விளையாட்டு சங்கங்களுடன் இணைந்து கூட்டு திட்டங்கள் ஊடாக தேசிய மட்டத்தில் இருந்து சர்வதேச மட்டத்திற்கு விளையாட்டை மேம்படுத்துவதற்கு செயற்படுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளையாட்டுத்துறை அமைச்சுக்கு பணிப்புரை விடுத்தார்.

இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இங்கு, விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய இளைஞர் படையணி ஆகியவற்றின் நிறுவன ரீதியிலான முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், அந்த நிறுவனங்களால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நாட்டின் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

அத்துடன், விளையாட்டுத்துறையின் அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை இதன்போது உன்னிப்பாக ஆராய்ந்த ஜனாதிபதி, விளையாட்டுத்துறையின் வளர்ச்சியின் ஊடாக உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போன்று சமூக நலன்களுடன் பொருளாதார நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் செயல்படுத்தப்படும் “யூத் கிளப்” திட்டம் குறித்தும் ஜனாதிபதி இங்கு கவனம் செலுத்தியதுடன், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு நவீன மற்றும் பலமான தொழிற்கல்வி மையங்களை அபிவிருத்தி செய்வதில் அவதானம் செலுத்துமாறும் பணிப்புரை விடுத்தார்.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களை திறம்படவும், வினைத்திறனுடனும் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 2025 ஆம் ஆண்டுக்கு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதியை ஆண்டு இறுதிக்குள் முறையாகப் பயன்படுத்துவதன் மூலம், எதிர்பார்த்த பௌதிக மற்றும் நிதி இலக்குகளை அடைய அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிலையான அபிவிருத்தியின் மூலம் சக்தி பாதுகாப்பை அடைவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு இன்று(16) கொழும்பு...

2026 ம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல்...

சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான ரூ.5,171 மில்லியன் பெறுமதியான துணி அனைத்தும் சீன அரசாங்கத்தின் மானியமாக...