follow the truth

follow the truth

July, 17, 2025
HomeTOP1ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் பெரும் தீ விபத்து: 50 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் பெரும் தீ விபத்து: 50 பேர் உயிரிழப்பு

Published on

ஈராக்கின் வாசித் மாகாணத்தில் உள்ள அல்-குட் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இன்று (17) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து தொடர்பான தொடக்க விசாரணை முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசித் மாகாண ஆளுநர் முகமது அல்-மியாஹி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியதுடன், தீ விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் பெரும்பகுதி முழுவதுமாக எரிந்த நிலையில், புகை மூட்டங்கள் வெளியேறுவதைக் காண்பிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம்

ஜனாதிபதி நிதியத்தை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி நிதியத்தை 011-4354250...

எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் இன்று(17) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால்...

இஸ்ரேலில் ஆட்சி இடியுமா? – ஆளும் கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் ஷாஸ் கட்சி புதன்கிழமை விலகுவதாக அறிவித்துள்ளது. மதக்...