சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதித் முகாமைத்துவ இயக்குநராக பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணைவதற்கான திட்டத்துடன் அவர் ராஜினாமா செய்யவுள்ளார்.
அங்கு, ‘முதல் கிரகரி மற்றும் ஆனியா கோஃபி பொருளாதாரப் பேராசிரியர்’ என்ற உயரிய பதவியில் அவர் மீண்டும் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.