முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை நிராகரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.