follow the truth

follow the truth

August, 23, 2025
HomeTOP2ரோஹிணி விஜேரத்னவின் மீதான தொடர்ந்து வரும் இழிவான விமர்சனங்களை கண்டிகிறேன்

ரோஹிணி விஜேரத்னவின் மீதான தொடர்ந்து வரும் இழிவான விமர்சனங்களை கண்டிகிறேன்

Published on

ஓர் ஆசிரியையாகவும், அர்ப்பணிப்புள்ள சமூக சேவையாளராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பங்களித்து வரும் ரோஹிணி விஜேரத்னவின் மீதான தொடர்ந்து வரும் இழிவான விமர்சனங்களை கண்டித்து, அவற்றை உடனடியாக நிறுத்தவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றிய அவர், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது வார்த்தைகளில் மட்டுமல்ல, நடைமுறையில் செயல்படுத்தப்பட வேண்டிய கடமையாகும் எனத் தெரிவித்துள்ளார். ரோஹிணி விஜேரத்னவின் நற்பெயரை தகர்க்கும் வகையில் சில உறுப்பினர்கள் இலக்காக வைத்து செயற்படுவது வருத்தத்திற்குரியதெனவும், இது அவரது சமூக சேவையை தடுக்க முயலும் ஒரு செயற்பாடு எனவும் சுட்டிக்காட்டினார்.

ரோஹிணி விஜேரத்னவின் தந்தை, விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தை தனிநபர் பிரேரணை மூலம் கொண்டு வந்த பெருமை வாய்ந்த ஒருவர் என்பதை நினைவுகூறிய அவர், அவரின் மகளும், நாட்டுக்காக பணியாற்றும் அர்ப்பணிப்பான ஒருவராக திகழ்கிறார் என வலியுறுத்தினார்.

இத்தகைய சூழலில், ரோஹிணியின் பாதுகாப்பு தொடர்பாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விசேட வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என்றும் சஜித் பிரேமதாசக் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...