follow the truth

follow the truth

July, 27, 2025
HomeTOP1கிளிநொச்சி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நபர் தற்கொலை

கிளிநொச்சி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நபர் தற்கொலை

Published on

கிளிநொச்சி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, அந்த காவல்நிலையத்தில் பணியாற்றிய இரு உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட 66 வயதுடைய நபர், காவல்நிலைய சிறைக்கூடத்தில் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தின்போது கடமையில் இருந்த உப காவல்துறை பரிசோதகரும், காவல்துறை கான்ஸ்டபிளும் விசாரணை முடிவுக்கு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்

பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பொலிஸார் அனுமதியின்றி நுழைந்ததாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டுகள்...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடகப் பணிப்பாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்ட பிரிகேடியர் எஸ். ஜோசப், கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். முன்னர் இந்தப்...

காடுகளுக்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்து விசேட விசாரணை

வனப்பகுதிகளுக்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்து விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வனப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் யானைகள்...