follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2"ஒரே பாலினத்தினால் எப்படி குழந்தை பெற முடியும்" - கர்தினால்

“ஒரே பாலினத்தினால் எப்படி குழந்தை பெற முடியும்” – கர்தினால்

Published on

இலங்கையில் ஒரே பாலின திருமணக் கருத்தை கடுமையாக எதிர்ப்பதோடு, பாரம்பரிய குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்.

பேருவளை புனித அன்னாள் தேவாலயத்தில் நடைபெற்ற மறைச்செயல் நிகழ்வில் பிரசங்கம் நிகழ்த்திய அவர், “திருமணத்தின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், தற்காலிக தீர்வுகளை நாடும் புதிய தலைமுறை தவறான பாதையில் பயணிக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.

இளம் தலைமுறையை தவறான பாதைக்கு இட்டுச் செல்கின்றது சில அமைப்புகள்

“இலங்கை இப்போது உலகளாவிய போக்குகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரே பாலின திருமணத்திற்கான ஆதரவை இளம் தலைமுறைக்கு ஊக்குவிக்க சில அமைப்புகள் தீவிரமாக செயல்படுகின்றன,” என அவர் கவலை தெரிவித்தார்.

“ஒரு குடும்பம் என்பது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து உருவாக்கும் பிணைப்பு. இந்த அடிப்படையை மாற்றும் முயற்சிகள் சமுதாயத்தையே பாதிக்கக்கூடும்,” எனக் கர்தினால் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...