follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP1லிந்துலையில் பயங்கர விபத்து - 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி

லிந்துலையில் பயங்கர விபத்து – 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி

Published on

லிந்துலை – மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பகுதியில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவரின் முதுகுத் தண்டுவடம் காயமடைந்துள்ளதால், அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுபோதையுடன் அதிக வேகத்தில் வண்டி ஓட்டப்பட்டு, வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சாரதி மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் அதிகளவில் மதுபோதையில் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானம்

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று நீதிமன்றுக்கு

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (31) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சட்டவிரோதமான...

நீதித்துறை விவகாரங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் – பிரதம நீதியரசர்

புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட பிரீதி பத்மன் சூரசேனை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் இன்று (31) கொழும்பு உயர்...