follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுஎதிர்வரும் வார இறுதி நாட்கள் தொடர்பில் சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்வரும் வார இறுதி நாட்கள் தொடர்பில் சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

Published on

நாளை முதல் எதிர்வரும் வாரஇறுதி நாட்கள் தொடர்பில் சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் சிந்தித்து பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார பிரிவு மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டாலும் அது பாரிய விடயமாகும் எனவும் அது அதிகரிப்பின் ஆரம்பமாக அமையுமென்பதே இதற்கு காரணமென விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் டெல்டா திரிபே பிரதான திரிபாக காணப்படுகிறது. தடுப்பூசி பெற்றுக்கொண்டால் மாத்திரமே மரணத்திலிருந்த தப்ப முடியும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் நீண்டவார இறுதி நாட்களில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமென விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

இதேவேளை தவறான எண்ணங்களிலிருந்து விடுபட்டு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் ச்சன்ன ஜயசுமன கோரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்பூசி வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் காணப்படுகிறது. பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் சற்று குறைவாகவே காணப்படுகிறது. குறித்த தவறான எண்ணங்களை விடுத்து பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் ச்சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...