follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டம் : இன்று முதல் மின்வெட்டு

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டம் : இன்று முதல் மின்வெட்டு

Published on

திட்டமிட்டப்படி இன்றைய தினம் சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார சபைக்கு புதிய பொது முகாமையாளரை நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது உட்பட பல விடயங்கள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் செயற்குழு உறுப்பினர் சரித ஜயநாத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சரித ஜயநாத் தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ வளாகத்திலுள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் இன்று பிற்பகல் 05.00 மணியளவில் மூடப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ வளாகம் அமைப்பிலிருந்து அகற்றப்பட்டால் 300 மெகாவோட் திறன் இழக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே இன்று முதல் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...