follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்பட்டது  - கப்ரால்

500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்பட்டது  – கப்ரால்

Published on

இன்றைய தினம் செலுத்தப்பட வேண்டியிருந்த கடன் தவணை செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

50 மில்லியன் டொலர் கடன் தவணை செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டு கடன் செலுத்தப்பட்டுள்ளமையானது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் இறக்குமதிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதென நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடனை செலுத்த முடியாத சூழல் தற்போதைய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் 500 மில்லியன் டொலர் கடன் தவணை செலுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கபடும் நிலையில் கடன் தவணை செலுத்தப்பட்டு மக்களுக்கான உணவும், மருத்துவம் உள்ளிட்ட சகல தேவைகளும் பூர்த்தி செய்யப்படுமென நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2020ம் ஆண்டில் 6.5 பில்லியன் டொலர்களை இலங்கை கடன் தொகையாக செலுத்த வேண்டியிருந்தது. கடந்த வருடத்தில் 6 பில்லியன்கள் செலுத்தப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. உரிய நேரத்தில் வெளிநாட்டு கடனை செலுத்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளமையானது பொருளாதார ரீதியில் நன்மை பயக்கும் விடயமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...