follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுஅபுதாபியில் நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இலங்கை கண்டனம்

அபுதாபியில் நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இலங்கை கண்டனம்

Published on

ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் நேற்று ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பொதுமக்கள் தலத்தின் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக பல பொதுமக்கள் கொல்லப்பட்டதை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது

உலகளாவிய சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...