follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுசீனிக்கு தட்டுப்பாடு இல்லை! பதுக்கி வைத்திருப்பவர்களை தேடுகிறோம்

சீனிக்கு தட்டுப்பாடு இல்லை! பதுக்கி வைத்திருப்பவர்களை தேடுகிறோம்

Published on

சீனிக்கு சந்தையில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தேவைக்கு அதிகமான சீனி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சந்தையில் சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்பட எவ்வித பின்புலமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சந்தையில் சீனி 150 ரூபாவிற்கு விற்கப்படுவது குறித்து டெய்லி சிலோன் ஊடகவியலாளர் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பினார்.

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அளவுக்கு அதிகமாக சீனி இறக்குமதி செய்தவர்கள் தற்போது அவற்றைப் பதுக்கி வைத்திருக்கக் கூடும் என்றும் இதுகுறித்து தேடுதல் நடத்தி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...