follow the truth

follow the truth

June, 16, 2025
Homeஉள்நாடுவருடாந்தம் வீசப்படும் 600 மில்லியன் பிளாஸ்டிக் கரண்டிகள் - மஹிந்த அமரவீர

வருடாந்தம் வீசப்படும் 600 மில்லியன் பிளாஸ்டிக் கரண்டிகள் – மஹிந்த அமரவீர

Published on

நாட்டில் வருடாந்தம் சுமார் 600 மில்லியன் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கரண்டிகள்  சுற்றுச்சூழலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு சுமார் 50 மில்லியன் பிளாஸ்டிக் கரண்டிகள் பயன்படுத்திய பிறகு வீசப்படுவதாகவும் ,குறிப்பாக தயிர், ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்களுக்காகவும், உணவு பதப்படுத்துபவர்களாலுமே  பிளாஸ்டிக் கரண்டிகள் பெரும்பாலும் நுகர்வோருக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒருமுறை  பாவனைக்குட்படுத்தியவுடன் தூக்கி எறியக்கூடிய பொருட்கள் என்பதால் இவை சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இவை அனைத்திற்குமான மாற்று பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...