follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடு17 மாவட்டங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளுக்கு சொகுசு பஸ் சேவை

17 மாவட்டங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளுக்கு சொகுசு பஸ் சேவை

Published on

மகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள 17 மாவட்டங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலைகளுக்கு 25 சொகுசு பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இந்த பஸ்கள் மகும்புரவில் இருந்து மொனராகலை, பதுளை, எம்பிலிப்பிட்டிய, அம்பாறை, அக்கரைப்பற்று, கண்டி, முல்லைத்தீவு, அனுராதபுரம், குருநாகல், மடோல்சிமா, வவுனியா, மட்டக்களப்பு, கதுருவெல மற்றும் கரடுகல ஆகிய பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும்.

மகும்புரவில் இருந்து காலி மற்றும் மாத்தறை வரையிலான பஸ் சேவைகள் இதுவரையில் இயங்கி வருவதாகவும், புதிய பஸ் சேவைகள் கொழும்பில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலை தணிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

மகும்புரா பல்நோக்கு போக்குவரத்து மையம் இந்த நீண்ட தூர சேவைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு வாகனதரிப்பிட வசதிகளையும் வழங்குகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...