follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடு17 மாவட்டங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளுக்கு சொகுசு பஸ் சேவை

17 மாவட்டங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளுக்கு சொகுசு பஸ் சேவை

Published on

மகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள 17 மாவட்டங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலைகளுக்கு 25 சொகுசு பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இந்த பஸ்கள் மகும்புரவில் இருந்து மொனராகலை, பதுளை, எம்பிலிப்பிட்டிய, அம்பாறை, அக்கரைப்பற்று, கண்டி, முல்லைத்தீவு, அனுராதபுரம், குருநாகல், மடோல்சிமா, வவுனியா, மட்டக்களப்பு, கதுருவெல மற்றும் கரடுகல ஆகிய பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும்.

மகும்புரவில் இருந்து காலி மற்றும் மாத்தறை வரையிலான பஸ் சேவைகள் இதுவரையில் இயங்கி வருவதாகவும், புதிய பஸ் சேவைகள் கொழும்பில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலை தணிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

மகும்புரா பல்நோக்கு போக்குவரத்து மையம் இந்த நீண்ட தூர சேவைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு வாகனதரிப்பிட வசதிகளையும் வழங்குகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...