follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய இஸ்ரேல்

இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய இஸ்ரேல்

Published on

சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான இஸ்ரேலிய முகவரமைப்பின் ஊடாக இஸ்ரேல் அரசாங்கம் இலங்கைக்கு வென்டிலேட்டர்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பல்ஸ் ஒக்சிமீட்டர்கள் உள்ளிட்ட பொருட்களை நன்கொடையாக வழங்கியதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் இஸ்ரேல் அரசாங்கத்தின் நன்கொடை கையளிக்கப்பட்டது.

இஸ்ரேலியத் தூதுவர் நவோர் கிலோன் இந்த நன்கொடையை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவிடம் கையளித்தார். இவ்விழாவில் இஸ்ரேலின் தூதுவர் விக்கி விக்கிரமதுங்கவும் கலந்து கொண்டார்.

இலங்கையும் இஸ்ரேலும் நெருங்கிய நட்புறவையும் ஒத்துழைப்பையும் கொண்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்டத்தில் இருந்து, இஸ்ரேல் அரசாங்கம் இலங்கைக்கு பெறுமதி வாய்ந்த கோவிட்-19 தொடர்பான உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...