follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுமத்தள சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும்

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும்

Published on

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகள் இந்த வருடத்தில் மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, மத்தள சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவையினை ஆரம்பிப்பது தொடர்பில் சர்வதேச ரீதியில் பல்வேறு முன்னணி விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத்தள விமான நிலையத்தின் சர்வதேச விமான சேவைகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படுமெனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் மாத்திரம் மத்தள விமான நிலையம் ஊடாக 32,957 பயணிகள் விமானம் போக்குவரத்து நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதுடன் அவற்றுள் 584 விமானங்கள் சர்வதேச சேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மத்தள விமான நிலையம் ஊடாக கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பெப்பிரவரி மாதம் 3 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 2,919 சுற்றுலா பயணிகள் நாட்டிகு வருகைத்தந்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...