follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுபரீட்சை மோசடி - பொறுப்பதிகாரிகளின் சேவை இடைநிறுத்தம்

பரீட்சை மோசடி – பொறுப்பதிகாரிகளின் சேவை இடைநிறுத்தம்

Published on

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் மோசடிகள் ஊடாக அநீதி இழைக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

அவ்வாறான மோசடியுடன் தொடர்புபட்ட பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளின் சேவை இடைநிறுத்தப்படுமென ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 உயர்தர பரீட்சை நிலையங்களில் நேற்று மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, நேற்று சித்திரப் பாடம் தொடர்பாகவே இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன. அவ் விரண்டு பரீட்சை நிலையங்களின் பொறுப்பதிகாரிகளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன்.

முதலாவது வினாத்தாள் உரிய நேரத்திற்கு முன்னர் சேகரிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 6 மாணவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம் சித்தரப் பாடத்தின் 2 வது வினாத்தாள் பெற்றுக்கொடுக்கப்படாமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளின் சேவை இடைநிறுத்தப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்பட முடியாதவை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...