follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉலகம்ஆபிரிக்காவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பரவும் போலியோ நோய்

ஆபிரிக்காவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பரவும் போலியோ நோய்

Published on

ஆபிரிக்காவில் ஐந்து வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக மாலாவி தலைநகரம் லிலோங்வியில் 3 வயது பெண் குழந்தைக்கு, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் டைப் 1 போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக, உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இவ்வகை போலியோ நோய் பரவல் மாலாவியில் தொடங்கியிருப்பதாக, மாலாவி சுகாதார அதிகாரிகள் அறித்துள்ளனர்.

குறித்த பாதிக்கப்பட்ட 3 வயது பெண் குழந்தைக்கு முடக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வகச் சோதனையில், இத்தகைய டைப் 1 போலியோ திரிபு, பாகிஸ்தானில் பரவும் திரிபுக்கு இணையானது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தகைய போலியோ பாதிப்பு இன்னும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் மட்டுமே உள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டில் இத்தகைய போலியோ பாதிப்பு ஆபிரிக்காவின் போர்னோ மாகாணத்தில் கண்டறியப்பட்டது. பின்னர், 2020ல் இத்தகைய போலியோ பாதிப்பு இல்லாத கண்டமாக ஆபிரிக்கா அறிவிக்கப்பட்டது.

போலியோ, அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் தொற்று நோயாகும். இந்த வைரஸ், நரம்பு மண்டலத்தில் நுழைந்து சில மணிநேரங்களிலேயே முழுமையாக முடக்குவாதத்தை ஏற்படுத்தக்கூடியதாகும் என தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுள்ளது

இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகின்றமை காரணமாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியாவில் 32 விமான நிலையங்களுக்கு பூட்டு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி...

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...