follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுசஹ்ரானின் மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சஹ்ரானின் மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா தொடர்பான வழக்கு விசாரணை மே மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத்தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா பகிரங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சிங்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமையால், தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு அவசியம் என மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனுவுக்கான உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி...

ரம்பொட பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அறிக்கை

ரம்பொட - கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 11 ஆம் திகதி நுவரெலியா...

கடலில் மூழ்கி காணாமல் போன மூவரில் இருவரின் சடலங்கள் மீட்பு

வென்னப்புவ கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூவரில், இருவரின் சடலங்கள் இன்று (14) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் பொகவந்தலாவயை...