follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்நான்கு நகரங்களில் போர் நிறுத்தம் - ரஷ்யா

நான்கு நகரங்களில் போர் நிறுத்தம் – ரஷ்யா

Published on

பொதுமக்கள், மாணவர்கள் வெளியேறும் வகையில் நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ பிடிக்க ரஷிய திட்டமிட்டுள்ளது. கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கிடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால் கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு மக்கள் வெளியேறினால் மட்டுமே, அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், மக்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என ரஷியாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷ்ய  ராணுவம் அறிவித்துள்ளது. இலங்கை நேரப்படி மதியம் 12.30 மணியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக மனிதாபிமான பாதை திறந்து விடப்படும் என  ரஷ்ய   ராணுவம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது...