follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுதாதியர் பல்கலைக்கழகத்தை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை

தாதியர் பல்கலைக்கழகத்தை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை

Published on

உத்தேச தாதியர் பல்கலைக்கழகம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் கல்வியமைச்சுக்களின் அதிகாரிகளுடன் தமது அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாதியர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நகல் சட்டமூலத்தை விரைவில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவிற்கு அங்கு பணிப்புரை வழங்கினார்.

உயர்திறன் மிக்க சர்வதேச மட்டத்திலான தாதி உத்தியோகத்தர்களை நாட்டில் உருவாக்குவது இதன் நோக்கமாகும். இவ்வாறான பல்கலைக்கழகம் ஒன்றை நாட்டில் ஆரம்பிப்பது சுகாதார மற்றும் கல்வித்துறைகளுக்கு விசேட திருப்பு முனையாக இருக்கும் என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாதியர் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைப் பிரகடனத்தில் மக்களுக்கு வழங்கியுள்ள ஓர் உறுதிமொழியாகும். தற்போது நாட்டில் உள்ள 6 பல்கலைக்கழகங்களில் தாதியர் பட்டப் பாடநெறி இடம்பெறுகின்றது. இதுதவிர 17 கல்லூரிகள் ஊடாக தாதிப் பயிலுனர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...