follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடு08 இந்திய மீனவர்கள் பிணையில் விடுதலை

08 இந்திய மீனவர்கள் பிணையில் விடுதலை

Published on

கிளிநொச்சி இரணைதீவு  கடற்பரப்பில் கடந்த 27ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 08  இந்திய மீனவர்களுக்கும் ஏழு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒருவருட கால  சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பிணையில் செல்ல கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 27ஆம்  திகதி எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த 08 இந்திய மீனவர்களையும், அவர்களின்  படகையும்  கைது செய்த கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட தையடுத்து குறித்த   இந்திய மீனவர்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்  பாலசுப்ரமணியம் முன்னிலையில்  ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து கடந்த (11-03-2022) திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதையடுத்து அன்றையதினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவர்களை இன்று (14-03-2022) வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம்  குறித்த மீனவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுப்பத்திரத்தை தாக்கல் செய்யுமாறும் மன்று கட்டளையிட்டது.

அதற்கமைவாக இன்றைய தினம் 08 இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற  நீதவான் எஸ் லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் குற்றச்சாட்டு பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து குறித்த குற்றச்சாட்டுடன்  தொடர்புபட்ட இந்திய மீனவர்கள் 08 பேருக்கும் தலா ஏழு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒரு வடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பிணையில் செல்ல நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இதேவேளை அவர்களை கைது செய்யும்போது அவர்களிடமிருந்த கைத்தொலைபேசிகள் மற்றும் நாணயங்கள் விடுவிக்கப்பட்டது டன்   படகு வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன அரசுடமையாக்கப்பட்டுள்ளன

குறித்த வழக்கில்  இந்திய மீனவர்கள் சார்பாக இந்தியத் துணைத் தூதரக அதிகாரி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதே நேரம் இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில்; 16, 18 வயது சிறுவர்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...