follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுதிருப்திகரமான தொழிலுக்கு ஊழியர்களுக்கு இடமளியுங்கள் - ஜனாதிபதி

திருப்திகரமான தொழிலுக்கு ஊழியர்களுக்கு இடமளியுங்கள் – ஜனாதிபதி

Published on

அனைத்து அரச ஊழியர்களுக்கும் திருப்திகரமான தொழிலுக்கு அவசியமான பின்னணி தயார் செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக பதவி உயர்வு நடவடிக்கைகளில் நிலவுகின்ற பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

கொழும்பு தெமட்டகொடையில் அமைந்துள்ள புகையிரத திணைக்களத்தின் பிரதான பொறியியல் தள உப திணைக்களம் மற்றும் மாளிகாவத்தை புகையிரதத் தளத்தை நேற்று(16) பார்வையிட்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நிறுவனங்களின் நாளாந்த செயற்பாடுகளை அவதானித்த ஜனாதிபதி, தற்போதுள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஊழியர்களிடம் தகவல்களைக் கேட்டறிந்தார்.

வெற்றிடங்களாகும் தொழிநுட்பக் கடமைகளுக்கு, சிற்றூழியர்களை ஈடுபடுத்துதல் காரணமாக ஊழியர்களுக்கு மத்தியில் அதிருப்தி நிலை தோன்றியுள்ளதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். திறமையான இளம் தொழிலாளர்களை இலங்கை – ஜேர்மன் புகையிரத பயிற்சி நிறுவனம் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பி, பயிற்சி வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுத்து அதற்கேற்ப முறையான பதவி உயர்வு முறையை உருவாக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...