follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

Published on

வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான உத்தேச மேலதிக ஊக்குவிப்புத் திட்டம் இரத்துச் செய்யப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

செலாவணி வீதத்தில் நெகிழ்ச்சித்தன்மையினை அனுமதிப்பது என்ற இலங்கை மத்திய வங்கியினது தீர்மானத்தின் விளைவாக, செலாவணி வீதமானது, வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்களையும் ஏற்றுமதி வருவாய்களை மாற்றுவதனையும் தூண்டும் நோக்குடன் வழங்கப்பட்ட ஊக்குவிப்பு மட்டத்தினை விஞ்சுகின்றதொரு மட்டத்தினை தற்போது அடைந்துள்ளமையினைக் காணமுடிகிறது.

இதற்கமைய, நடைமுறை செலாவணி வீதம், வெளிநாட்டு வேலையாட்களின் வெளிநாட்டுச் செலாவணி பணவனுப்பல்களின் மீதும் ஏற்றுமதியாளர்களின் தேறிய வருவாய் மீதான உயர்ந்த ரூபா பெறுமதியின் மீதும் உயர்ந்த வருமானத்தினை வழங்குகிறது.

அண்மைய இந்நிகழ்வுகளைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்களுக்காகவும் ஏற்றுமதியாளர்களின் தேறிய வருவாய்களுக்காகவுமான மேலதிக ஊக்குவிப்புக்களுக்கான உத்தேச திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில்லை எனத் தீர்மானித்திருக்கிறது.

வெளிநாட்டுச் செலாவணி வீதத்தில் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க மேல் நோக்கிய சீராக்கத்தின் காரணமாக, பிந்திய அலுவல்சார் தரவுகளின்படி, வெளிநாட்டு வேலையாட்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் முறைசார்ந்த வழிப்படுத்தல்கள் ஊடான வெளிநாட்டுச் செலாவணியின் மாற்றல்கள், 2022 மாச்சு மாத காலத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்களை ஏற்கனவே காட்டியுள்ளன என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...